கடத்தூர், நவ.23: முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடத்தூர் ஒன்றியம், புதுப்பட்டி பகுதியில் இருந்து ராணிமூக்கனூர் பிரிவு ரோடு வரை, சுமார் 820 மீட்டர் தூரம், ஒரு சிறு பாலத்துடன் ₹39.83 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது. சாலை அமைக்கும் போது, அப்பகுதி மக்கள் தரமாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் சாலைகள் அமைக்கப்பட்டது. தற்போது சாலை அமைக்கப்பட்டு, சுமார் 3 மாதமே ஆன நிலையில், பல்வேறு இடங்களில் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது. எனவே, பழுதடைந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தரமற்று அமைத்த சாலை 3 மாதத்தில் பெயர்ந்தது appeared first on Dinakaran.