தமிழ்நாட்டில் வரும் நாள்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

1 day ago 2

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாள்களில் வெப்பநிலை 2லிருந்து 3 டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது;

“அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
24-03-2025 மற்றும் 25-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

27-03-2025 முதல் 29-03-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
24-03-2025 மற்றும் 25-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக
இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

26-03-2025 முதல் 28-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

27-03-2025 மற்றும் 28-03-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (24-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (25-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வரும் நாள்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article