சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது;
பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனைச் சுற்றிய மாலத்தீவு முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி செயல்பட்டு உள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 17ம் தேதி வரை இதே நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! appeared first on Dinakaran.