
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-
மதுரை விமான நிலையம் - 105.08 டிகிரி பாரான்ஹீட்
ஈரோடு - 104.36 டிகிரி பாரான்ஹீட்
கரூர் பரமத்தி - 104 டிகிரி பாரான்ஹீட்
மதுரை நகரம் - 101.84 டிகிரி பாரான்ஹீட்
பாளையங்கோட்டை - 101.3 டிகிரி பாரான்ஹீட்
திருச்சி - 101.3 டிகிரி பாரான்ஹீட்
சென்னை மீனம்பாக்கம் - 100.4 டிகிரி பாரான்ஹீட்