
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.