தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

2 months ago 12

சென்னை: வங்கக் கடலில்நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று அதிகாலையில் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. பின்னர் அது மேற்கு- வட மேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளது. இது தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் வாய்ப்புள்ளது.

பின்னர் 2நாட்களில் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்- இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் ஒரு சில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 28ம் தேதி வரை நீடிக்கும். 29ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

The post தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article