சென்னை: சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள 240 ஆண்டுகள் பழமையான பொது அஞ்சலகத்துக்கு நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது. சுற்றுலா, ஆன்மிகம், வரலாறு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு ‘நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை’ வெளியிடப்படுகிறது.
சென்னையில் மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், அண்ணா சாலை அஞ்சல் தலை பணியகம், சென்னை பல்கலைக்கழக அஞ்சல் அலுவலகம் உட்பட தமிழகத்தில் இதுவரை 51 தபால் நிலையங்களுக்கு நிரந்தர அஞ்சல் முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.