
சென்னை,
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும், இயல்பை விட சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இம்மாத இறுதி வரையில் வெப்பம் அதிகரித்தே இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-
வேலூர் - 104.18 டிகிரி பாரான்ஹீட் (40.1 செல்சியஸ்)
கரூர் பரமத்தி - 103.1 டிகிரி பாரான்ஹீட் (39.5 செல்சியஸ்)
ஈரோடு - 102.92 டிகிரி பாரான்ஹீட் (39.4 செல்சியஸ்)
திருச்சி - 102.74 டிகிரி பாரான்ஹீட் (39.3 செல்சியஸ்)
தஞ்சாவூர் - 102.2 டிகிரி பாரான்ஹீட் (39.0 செல்சியஸ்)
சேலம் - 101.66 டிகிரி பாரான்ஹீட் (38.7 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம் - 101.12 டிகிரி பாரான்ஹீட் (38.4 செல்சியஸ்)
திருப்பத்தூர் - 101.3 டிகிரி பாரான்ஹீட் (38.5 செல்சியஸ்)
திருத்தணி - 100.76 டிகிரி பாரான்ஹீட் (38.2 செல்சியஸ்)
தருமபுரி - 100.4 டிகிரி பாரான்ஹீட் (38.0 செல்சியஸ்)