தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

1 week ago 4

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டருந்த தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முயன்ற 2 மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 பேர் மீனவர்கள் காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே வெள்ளிக்கிழமை(ஜன.25) இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் தொடர்ச்சியாக நடைபெறும் கைது சம்பவங்களைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

 

The post தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article