ஆந்திரா:தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும் என காக்கிநாடாவில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சர்ச்சையாக பேசி உள்ளார். ஆந்திராவில் கட்சி தொடங்கி 12 ஆண்டுகளில் துணை முதலமைச்சராக உயர்ந்திருக்கும் நடிகர் பவன் கல்யாண் மும்மொழி கொள்கையில் தமிழ்நாட்டின் நிலைபாடு குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தனது கட்சியின் 12 வது ஆண்டு விழாவில் பேசிய பவன் மக்களவை தொகுதி,மறுசீரமைப்பு விவகாரம், மும்மொழி கொள்கை, ரூபாய் லட்சினை மாற்றப்பட்டது.
குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய நிலையில் அது விவாத பொருளாக மாறியுள்ளது. அது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி உள்ளது.அதில், தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறார்கள், அதே நேரத்தில் நிதி ஆதாயத்திற்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள். இதில் என்ன லாஜிக் உள்ளது?”. சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. மக்கள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.