தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்றும் முயற்சியை தடுக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

3 months ago 15

மதுரை: ‘தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இதனை தமிழக அரசு தலையிட்டு பாதுகாக்க வேண்டும்’ என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மக்களின் பெரும் வரலாற்று ஆவணங்களாகிய கல்வெட்டுகள் ஆங்கிலேயர்களின் காலத்திலிருந்து மைப்படி எடுக்கப்பட்டன. அந்த மைப்படிகள் 1961-ம் ஆண்டு வாக்கில் மைசூருக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டன. அவை பராமரிப்பின்றியும், தமிழக மாணவர்கள் ஆய்வுக்குகூட அணுகமுடியாத நிலையிலும் இருந்தன. எனவே, அவற்றைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தமிழார்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம்.

Read Entire Article