சென்னை: தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றியவர் குமரி அனந்தன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குமரி அனந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரின் மறைவுக்கு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.