புதுச்சேரி: “புதுச்சேரி, காரைக்காலில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். அது நம் உணர்வு.” என்று முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.
புதுவை சட்டப்பேரவையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்எல்ஏ நேரு பேசுகையில், “தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக புதுவை, காரைக்காலில் செயல்படும் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் தமிழ் எழுத்துகளின் வாசகங்கள் முதல் வரிசையில் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கடுத்து தான் பிறமொழி வாசகங்கள் இடம்பெற செய்ய வேண்டும்.