“இந்தியைத் திணிக்க முயற்சி...” - மக்களவையில் இணை அமைச்சர் பதிலுக்கு சு.வெங்கடேசன் எதிர்வினை

6 hours ago 5

புதுடெல்லி: “தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கொண்டு போய் சேர்க்கும் இலக்கை கொண்டது. 2023 - 24-ல் ரூ.1,876 கோடி தமிழகத்துக்கு தரப்பட்டது. 2024-25-க்கு 4,305 கோடி நிதிக்கு திட்ட ஒப்புதல் குழு இசைவு தந்துள்ளது. தாய்மொழி கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருகிறது” என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கூறியுள்ளார்.

மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “சமக்ரா சிக் ஷா அபியான் திட்டத்துக்கான ரூ.2,154 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது ஏன்? தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்து இருக்கிறதா? ஏன் அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது? தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியைத் திணிக்க முயற்சிப்பது மொழி பன்மைத்துவத்துக்கு எதிரானது இல்லையா? இது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மாறானது இல்லையா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

Read Entire Article