‘தமிழர்களின் நலன் காக்கப்பட திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்’ - அமைச்சர் தங்கம் தென்னரசு

4 months ago 19

சிவகாசி: தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும், என சமூக வலைதள பயிற்சி முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

சிவகாசியில் திமுக சார்பில் 'எக்காலமும் நம் களமே' என்ற தலைப்பில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்த இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைதள பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்: களத்தில் நாம் அசகாய சூரர்களாக இருக்கலாம், ஆனால் நேற்று ஆரம்பித்து இருக்கக்கூடிய கட்சிகள் கூட, தமிழகத்தில் தங்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி விட முடிகிறது. அதற்கு காரணம் அனைத்து தரப்பிலும் இருக்கக்கூடிய தன்னார்வலர்களை, ஆதரவாளர்களை களத்தில் ஒன்றுபடுத்திவிடுகிறார்கள்.

Read Entire Article