நாமக்கல்: தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, விவசாய நிலங்களில் உள்ள பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி, விற்பனை செய்யலாம். கள் போதைப் பொருள் அல்ல, உணவுப் பொருட்கள் பட்டியலில் உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.