தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளில் நாளை முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை

4 months ago 20

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகளில் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை நாளை தொடங்குகிறது. வெளிச்சந்தையைவிட குறைவான விலைக்கே விற்கப்படுவதால், தீபாவளி சிறப்பு தொகுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, கூட்டுறவு துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவை பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை வரும் 28-ம் தேதி (நாளை) தொடங்க உள்ளது.

Read Entire Article