![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38340896-1.webp)
சென்னை,
வருகிற 11-ந்தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைக்கான விடுமுறையானது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொருந்தும். டாஸ்மாக் விடுமுறை தொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38341084-2.webp)