தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு: முந்தைய ஆண்டைவிட பருவமழை அதிகம்

4 months ago 13

தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 2024-ல் 1,179 மிமீ மழை பதிவானது. முந்தைய ஆண்டைவிட இது 143 மி.மீ. அதிகம். தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 10 சதவீதமும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் 27 சதவீதம் அதிக மழை பதிவானது. தென்மேற்கு பருவக் காலத்தில் செப்டம்பர் மாதத்தை தவிர, இதர மாதங்களில் அதிகளவு மழை பதிவாகியிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் இயல்பைவிட 64 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

Read Entire Article