“தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை” - பாஜக

6 months ago 32

சென்னை: தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். மத்திய அமலாக்கத் துறை தமிழக காவல்துறைக்கு அளித்த ₹4730 கோடி மணல் கொள்ளையின் ஊழல் புகார் குறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மணல் வளத்தையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

Read Entire Article