“தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்” - கார்த்தி சிதம்பரம்

3 months ago 14

சிவகங்கை: ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். அதைத்தான் திருமாவளவன் கூறியுள்ளார். அவரது கருத்து நியாயமானதுதான். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாததால் அதிமுகவில் தற்போது குழப்பம் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பது உடனடியாக நடக்காது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக கூட்டணி ஆட்சியில் பங்கு பெற முயற்சிப்போம். பின்னர் தனித்து ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.

Read Entire Article