சென்னை: தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விபரம்:
* மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் – கலை அரசி
* தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் – சம்பத்
* நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர்- மகேஸ்வரி
* தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் – ஜான் லூயிஸ்
* பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ்
* புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் – மோகன்
* உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர்- சிவராசு
* தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் – ராஜேந்திர ரத்னு( கூடுதல் பொறுப்பு)
* தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநர்- கேத்தரின் சரண்யா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
The post தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.