சென்னை: “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 மி.மீ, டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ. ஆக மொத்தம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 589.9 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (டிச.31) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 மி.மீ, டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ. ஆக மொத்தம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 589.9 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 25 சதவீதம் அதிகமாகவும், நவம்பர் மாதத்தில் இயல்பை விட 23 சதவீதம் குறைவாகவும், டிசம்பர் மாதத்தில் 164 சதவீதம் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது.