தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

4 months ago 19

சென்னை,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இரவு 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர்,தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article