தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம்: இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு

1 week ago 3

தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஜன.25-ல் கடலுக்கு சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி அதிலிருந்த ஜெயபால், ஏனோக், வீரபாண்டி, சுரேஷ், அந்தோணி, சூசை, சிவசங்கர், குணசேகரன், முத்து, அபிஸ்டன், சந்தோஷ், ரேமிஸ்டன், மேக்மில்லன், ஆரோக்கிய ஜோபினர், அகரின் ஆகிய 15 மீனவர்களை சிறைபிடித்தனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Read Entire Article