தமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி - அண்ணாமலை

6 months ago 24

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்த 28 மீனவ சகோதரர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரின் சீரிய முயற்சியால், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு, தாயகம் வந்தடைந்தனர்.

திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர்களை, நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காந்தி அவர்களும், தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சதீஷ் மற்றும் மீனவர் அணி மாநிலத் தலைவர் M.C.முனுசாமி ஆகியோரும் வரவேற்றனர்.

உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் மீனவ சகோதரர்கள் அனைவரையும் மீட்டுக் கொண்டு வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article