நாகப்பட்டினம்: கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்துச் சென்றனர். காயமடைந்த 4 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டை மீனவர் காலனியைச் சேர்ந்த செந்தில்(46), ஜெகன்(36), திருவெண்காடு சாவடிகுப்பம் ராமகிருஷ்ணன்(67), சென்னை சாமுவேல்(35) ஆகியோர் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.