சென்னை: காவல்துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் வரும் 7ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர்கள்(தாலுக்கா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான நேரடி தேர்வு 2025க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கிறது. ஊதிய விகிதம் ரூ.36,900 – 1,16,600 வரை. 1,299 சார்பு ஆய்வாளர்களுக்கான இணைய வழி விண்ணப்பங்கள் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 3.5.2025 ஆகும். சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வுக்கான பொது விண்ணப்பதாரர்கள் மற்றும் துறை விண்ணப்பதாரர்களுக்கு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
காவல் சார்பு ஆய்வாளர்(தாலுகா) ஆண்கள் 654, பெண்கள் 279 என மொத்தம் 933 இடங்கள் உள்ளது. அதேபோல் காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை) ஆண்கள் 255 பெண்கள் 111 என மொத்தம் 366 இடங்கள் உள்ளது. தாலுக்கா மற்றும் ஆயுதப்படை என மொத்தம் ஆண்கள் 909 இடங்களும் பெண்களுக்கு 390 இடங்கள் என மொத்தம் 1,299 இடங்கள் உள்ளது. 53 எஸ்சி மற்றும் எஸ்டி பற்றாக்குறை காலிபணியிடங்களின் விபரம் தகவல் சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம் பற்றாக்குறை கா லிபணியிடங்களை தவிர அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதாவது ஒரு இளங்கலைப்பட்டம் இருந்தால் போது, வயது வரம்பு 1.7.2025 ன் படி 20 வயது நிறைவுற்றவராகவும், மற்றும் 30 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும். (விண்ணப்பதாரர்களின் வயது உச்சவரம்பு வகுப்பு, பிரிவுகளுக்கு தக்கவாறு மாறுபடும். எனவே விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கும், மேற்கொண்டு தகவல் அறிவதற்கும் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்ஐ பதவிகளுக்கு 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.