தமிழக அளவில் டிச.11ல் கண்டன ஆர்ப்பாட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு

5 months ago 17

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சென்னையில் வள்ளுவர் கோட்டத்திலும் டிசம்பர் 11ம்தேதி நடைபெற உள்ளது.

குறிப்பாக வாடகையின் மீதான 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் மாநிலத்தில் சொத்துகள் மீதான 6% வரி உயர்வை திரும்பப் பெற கோரியும் வணிக உரிமக் கட்டண உயர்வு தொழில் வரி உயர்வு போன்றவற்றை திரும்பப் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழக அளவில் டிச.11ல் கண்டன ஆர்ப்பாட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article