திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் 21ம் தேதி காலை 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தனியார் துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், கணக்காளர், டெக்னீஷியன், மெஷின் ஆப்பரேட்டர், நிர்வாகப் பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினை பெற்று பயனடையலாம். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
The post தனியார் வேலைவாய்ப்பு முகாம்: வரும் 21ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.