தனியார் நிறுவனத்தில் ரூ.88 லட்சம் மோசடி செய்த பெண் சிறையில் அடைப்பு

1 month ago 2

வேளச்சேரி: வேளச்சேரி, லட்சுமி நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வீரசேகரன் (57), செடிகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கடந்த 2007ல் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த நித்யா என்பவர் வேலைக்கு சேர்ந்தார். இங்கு ஆட்கள் தேர்வு செய்வது, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது மற்றும் நிறுவனத்தின் வரவு செலவு உள்பட மொத்த கணக்கு வழக்குகளையும் நிர்வகித்து வந்தார். இந்நிலையில் 2023ம் ஆண்டு நித்யா வேலையிலிருந்து திடீரென நின்றுவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வீரசேகரன் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்தார். அப்போது, நிறுவனத்தில் சுமார் ரூ.88 லட்சம் நித்யா மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேளச்சேரி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். அதில், நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை நித்யா தனது வங்கி கணக்கு உறவினர்கள் வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நித்யா (41) கைது செய்யப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தனியார் நிறுவனத்தில் ரூ.88 லட்சம் மோசடி செய்த பெண் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article