தண்டையார்பேட்டை குடியிருப்பில் ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற அரசுக்கு ஐகோர்ட் கெடு

3 months ago 16

சென்னை: தண்டையார்பேட்டை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளாக அகற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வார காலத்துக்குள் அவற்றை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக் கோரி தூயமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

Read Entire Article