சென்னை: திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் இருவேறு இடங்களில் போல்ட், நட்டுகள் கழற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ரயில் தண்டவாளத்தை தீவிரமாக கண்காணிக்க தண்டவாள பராமரிப்பாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்துக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அரிசந்திராபுரம் என்ற இடத்தில் சென்னை நோக்கி விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் கடந்த 25-ம் தேதி அதிகாலை திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது ரயில்வே ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே பாயின்ட்மேன், சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டபோது, அந்த தண்டவாள இணைப்பு பகுதியில் போல்ட், நட்டுகள் மர்ம நபர்களால் கழற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.