தட்டார்மடம் பகுதியில் திடீர் மழை

4 months ago 28

 

சாத்தான்குளம், அக்.7:தட்டார்மடம் பகுதியில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15ம்தேதியில் இருந்து தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படிவானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வானிலை மையம் சார்பில் தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று சாத்தான்குளத்தில் மழை பெய்யவில்லை. சாத்தான்குளம் அருகே தட்டார்மடம், இடைச்சிவிளை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தட்டார்மடம் பகுதியில் திடீர் மழை appeared first on Dinakaran.

Read Entire Article