தேனி, மே 10: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லையாறு தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து ஒரு இளைஞர் குழுவினர் வீரபாண்டி திருவிழாவை காண நேற்று வீரபாண்டிக்கு வந்தனர்.
அவர் சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று மாலை முல்லைப் பெரியாறு தடுப்பணைக்கு சென்று குளித்தனர். அப்போது திருப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (26) என்பவர் தண்ணீரில் மூழ்கினார். இவரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே வாலிபர் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.