தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 4.74 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 1 லட்சம் டன் அதிகம் ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பா பருவத்தில் 3.22 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டது. இதில், நேற்று முன்தினம் வரை 3.17 லட்சம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.