தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது

2 months ago 9

சென்னை: தங்கம் விலை அக்டோபர் மாதம் முதல் உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 30ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57200க்கு விற்கப்பட்டது. 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வாரத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து 1 கிராம் ரூ.7,090க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720க்கும் விற்கப்பட்டது.

இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் திடீரென மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,130க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.57,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 5வது நாளாக ஒரு கிராம் ரூ.100க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article