ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரியிலிருந்து 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 131 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 38 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை பெற்று அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும் 42 தமிழக மீனவர்கள், 13 காரைக்கால் மீனவர்கள் நீதிமன்ற விசாரணையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் பிப்ரவரி 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.