மதுரை, ஜன. 26: மதுரை அருகே டி.கொடிமங்களத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ்(29). இவருக்கும், இதே ஊரைச்சேர்ந்த முத்துக்காத்தான் மனைவி பொன்னம்மாள் மற்றும் காத்தம்மா(45) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே இடம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இப்பிரச்னை தொடர்பான புகார்கள் மீது இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த புகார்களை திரும்ப பெற வேண்டும் என்று கூறி, இரு தரப்பினருக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையோருவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்னை குறித்து இரு தரப்பினரும் சத்திரப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பொன்னம்மாள், காத்தம்மா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post தகராறில் ஈடுபட்ட 2 பெண்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.