டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

4 hours ago 4

புதுடெல்லி,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், புதுடெல்லியில் நடைபெற்றுவரும் விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (23.5.2025) புதுடெல்லி சென்றடைந்தார்.

பின்னர், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, புதுடெல்லி, சாணக்யபுரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுடெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தின் பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் , 26.7.2024 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து அங்கு கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இப்புதிய கட்டிடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்புத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கி, 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article