டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. விருந்தினர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்!!

3 hours ago 2

டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி காவல்துறைக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் இருந்து விருந்தினர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, அங்கு சோதனை நடந்து வருகிறது.

மேலும், தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி மகாதேவன் உள்பட அனைத்து விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் டெல்லி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. விருந்தினர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்!! appeared first on Dinakaran.

Read Entire Article