சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர். கரூர் பரமத்தி, திருச்சியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது; சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருச்சி, வேலூர், மதுரை விமான நிலையம், சேலம், மீனம்பாக்கத்தில் 100 டிகிரியை தாண்டியது. ஈரோடு, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, திருத்தணி, தஞ்சையில் 100 டிகிரியை தாண்டியது.
The post ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.