டெல்லி ரஜௌரி கார்டன் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பயங்கர தீ விபத்து!

2 months ago 10

டெல்லி: டெல்லி ரஜௌரி கார்டன் மெட்ரோ அருகே உள்ள உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் உணவகத்தில் அமர்ந்திருந்தவர்கள் தீயில் இருந்து தப்பிக்க உயிரைக் காப்பாற்றிக் கொள்ள குதிக்கத் தொடங்கினர். சிலர் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது குதித்து உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.

தீ விபத்து குறித்து கிடைத்த தகவலின்பேரில் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தீயின் தன்மை தீவிரமாக இருந்ததால் சிறிது நேரத்தில் உணவகம் முழுவதும் எரிந்தது. தீயணைப்பு படையினர் கடும் முயற்சிக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த தீ விபத்தில் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் தீ விபத்தால் அருகில் உள்ள கடைகளும் சேதமடைந்தன.

The post டெல்லி ரஜௌரி கார்டன் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பயங்கர தீ விபத்து! appeared first on Dinakaran.

Read Entire Article