டெய்லர் தூக்கிட்டு தற்கொலை

1 day ago 4

திருப்பூர், மே 22: திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அண்ணா வீதியை சேர்ந்தவர் டெய்லர் சுரேஷ்குமார் (40). இவர், மன அழுத்தம் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று அதிகாலை சுரேஷ்குமார் தூங்காமல் வெளியே நின்று கொண்டிருந்தார். அவரை அவரது தாய் கலாமணி உள்ளே சென்று தூங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து அறைக்குள் சென்று கதவைப் பூட்டிய சுரேஷ்குமார், நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் கலாமணி ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது சுரேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சுரேஷ்குமாரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டெய்லர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article