டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

2 months ago 9

தொண்டி, டிச.5: தொண்டியில் சரக்கு வாகனம், டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார். பட்டுக்கோட்டை ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சரக்கு வாகனம் சென்றது. அப்போது எதிரே வந்த டூவீலருடன் மோதியது. இதில் டூவீலரில் சென்ற தொண்டி காந்தி நகரை சேர்ந்த தமிழ்மாறன் மகன் ரவிக்குமார்(24) பலத்த காயம் அடைந்து இறந்தார். விபத்து பற்றி தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article