டூவீலரில் ஆடு திருடிய வாலிபர் சிக்கினார்

4 months ago 19

தர்மபுரி, ஜன.21: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஆனந்தன்(40). டிராக்டர் டிரைவரான இவர், வீட்டில் ஆடு-மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கால்நடைகளுக்கு தீவனம் போட்டு விட்டு உறங்க சென்றார். மறுநாள் அதிகாலை ஆடுகள் சத்தம் போட்டதை கேட்டு, ஆனந்தன் திடுக்கிட்டு எழுந்தார். உடனே, பட்டிக்கு சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் 2 ஆடுகளை திருடிக் கொண்டு டூவீலரில் தப்ப முயன்றதை கண்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்று, அந்த வாலிபரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், அவர் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் சத்யமூர்த்தி(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

The post டூவீலரில் ஆடு திருடிய வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article