டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் பரபரப்பு பேரணாம்பட்டில் கனமழை

8 months ago 36

பேரணாம்பட்டு, அக்.4: பேரணாம்பட்டில் கனமழை பெய்தபோது டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. இதேபோல், பேரணாம்பட்டு பகுதியில் காலை முதல் பிற்பகல் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. இரவு சுமார் ஒருமணி நேரம் இடியுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது, பேரணாம்பட்டு லால் மஸ்ஜித் தெருவில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தொடர்நது, மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீரமைத்தனர். பணிகள் முடிந்து சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு மின்சப்ளை வழங்கப்பட்டது.

The post டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் பரபரப்பு பேரணாம்பட்டில் கனமழை appeared first on Dinakaran.

Read Entire Article