டிரம்புடன் வெடித்த வார்த்தை போர்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவு

4 hours ago 1

வாஷிங்டன்,

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் அவர் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.

பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷியா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.

இதை கேட்டு கோபமடைந்த ஜெலன்ஸ்கி, ரஷியாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷியா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷியாவிற்கு இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷியாவால் உங்களுக்கும் ஆபத்து வரும்" என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், "உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றார்.

இதற்கு கோபமாக பதில் அளித்த ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி" என்று அவர் கூறினார். என்றுள்ளார்.

அவர் பேச்சில் கடுப்பான டிரம்ப், "அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு... முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் ஜனாதிபதி உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் ஏதோ உங்கள் நாடு இருக்கிறது.

இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. ஒப்பந்தம் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்" என்று காட்டமாக கூறினார்.

இந்த கடுமையான பேச்சு வார்த்தையால் திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிறிய முகத்துடன் வெளியேறினார்.

இதனைத்தொடந்து பேச்சு வார்த்தை குறித்து ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது அறிக்கையில், வெள்ளை மாளிகையில் மிகவும் அர்த்தமுள்ள சந்திப்பை நடத்தினோம் என்றும் அமெரிக்கா ஈடுபட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை என்று தீர்மானித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இருக்கும்போது திரும்பி வரலாம் என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ் தனது எக்ஸ் பதிவில், "அமெரிக்காவுக்கு நன்றி, உங்கள் ஆதரவுக்கு நன்றி.. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்க்கும் நன்றி, உக்ரைனுக்குக்கு நியாயமான மற்றும் நிரந்தர அமைதி தேவை, அதற்காக நாங்கள் சரியாக பாடுபடுவோம்" என்று கூறியிருந்தார்.

இதனிடையே மற்ற நாடுகளுக்கு இதை செய்வதை விட.. அமெரிக்காவின் நட்பு நாடு ஒன்றிற்கு டிரம்ப் இதை செய்ததுதான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பா, நேட்டோ படையில் உள்ள மற்ற உலக நாடுகளை இது கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article