டிசம்பர் முதல் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கம்: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு

5 hours ago 3

சென்னை: “ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். போக்குவரத்துத் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுகையில், “தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

Read Entire Article