கரூர்: கரூர் மாவட்டத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் 31 ம்தேதி வரை அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 49 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் மதியம் 12 மணி முதல 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு ந வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் டிசம்பர் 1ம் தேதி 31 ம்தேதி வரை கரூர், சின்னதாராபுரம், க.பரமத்தி, லாலாப்பேட்டை, வாங்கல் வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோணிமலை, சிந்தாமணிப்பட்டி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், தென்னிலை, குளித்தலை, பாலவிடுதி.
நங்கவரம் மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றவர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் 31 ம்தேதி வரை மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 49 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 1198 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
The post டிசம்பர் மாதத்தில் கூடுதல் விலைக்கு மது விற்ற 49 பேர் கைது appeared first on Dinakaran.